சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தொடரப்பட்ட முதன்மை வழக்கு மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், முற்றுகைப் போராட்டம் நடைபெறுமா என்பது தெரியவில்லை.
ஆனால், இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மனித நேய ஜனநாயகக் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான தமுமின் அன்சாரி "போராட்ட அமைப்பாளர்களை எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை என்பதால் நீதிமன்றம் விதித்த தடை எங்களுக்குப் பொருந்தாது. திட்டமிட்டபடி நாளை சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும்," என்று தெரிவித்தார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் எனக் கோரி கடந்த ஐந்து நாட்களாக சென்னை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவருகின்றன.