கண என்றால் ஒரு குழு என்றும் பதி என்றால் இறைவன் என்றும் அர்த்தம். கணபதியை வெளித்தோற்றமாக பார்க்கும் போது அவர் ஒரு யானை வடிவ உயிரினமாக தெரியலாம் ஆனால் இது வெறும் மேற்போக்கு பார்வை மட்டுமே. உள்ளுக்குள் அவர் அனைத்தையும் அறிந்த கடவுளாக திகழ்கிறார்.
இப்படி விநாயகர் உருவம் வெவ்வேறு விதமான விலங்குகளின் வடிவங்களில் காணப்படுவது வெவ்வேறு ஆன்மாக்களையும், ஆற்றல்களையும் வழங்குகின்றன. அவர் சிவனுக்கு மேல் உயர்ந்தவராக இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறார்.